About Me

2020/06/16

வேண்டாமே முகமூடிகள்

உள்ளொன்றும் புறமொன்றுமாக முகமதைச் செதுக்கி
கள்ளமாக உறிஞ்சிடுவார் அடுத்தவர் புன்னகைகளை
உள்ளத்தின் அழுக்கில் தள்ளாடும் பொய்களால்
துள்ளிடுவார் கபட வேசங்கள் அணிந்தே

புவிக்குள் வேரூன்றி கனிந்திடுவார் சுயநலமாய்
நாவினிக்கும் பேச்சினால் கரைத்திடுவார் துரோகங்களை
மலருக்குள் மறைந்திருக்கும் முட்களின் விரல்களால்
நலம் விசாரித்தே பிடுங்கிடுவார் மூச்சுக்களை

கெடு மதியால் கேடுகள் செய்தே
இடுக்கண் விளைவிப்பார் மனித மனங்களில்
மிடுக்குடன் அவனிக்குள் உலாவும் போலிகள்
தடுக்கி விழட்டும் காணாமல் போகட்டும்

ஜன்ஸி கபூர்   




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!