About Me

2020/06/15

கவிதை பிறந்தது

செந்தமிழ் பிசைந்து தெவிட்டா அமுதுடன்
சிந்தையில் பூத்த எண்ணங்களை வார்த்தே
சந்தக் கவி களிசைத்து மகிழ்ந்தோம்
முத்தமிழ் வளர்த்த நிலாமுற்ற முன்றலில்

இணையம் தந்த இதயம் மகிழ்ந்திட
இணைந்த கவிகளால் மகிழ்வும் பெருகிட
கற்பனையும் யதார்த்தமுமாய் கலவைகள் கரைத்தே
சொற்களும் பதங்களுமாய் அலங்கரித்தன கவிதைகள்

முத்துபேட்டை மாறனார் செதுக்கிய தளமாம்
முகநூலில் கலைநயம்  வளர்த்திட்ட தடமாம்
அகமதின்  எண்ணங்களை பண்புடன் படைத்திட
ஆக்கமும் ஊக்கமும் தெளித்திடும்  வளமாம்

கவிகளோடு பிறந்து கவியாய் வாழ்ந்து
புவி யலைவரிசையின் தமிழ் வாழ்த்தாய்
கலைகள் வளர  கருத்தாகி மலர்ந்த
கலைமகனை வாழ்த்த கவிதை பிறந்ததுவே

ஜன்ஸி கபூர்     - 15.06.2020




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!