About Me

2020/06/18

சிறகுகள் இல்லாத சருகுகள்

 மரத்தில் மகிழ்ந்து மடியில் தவழ்ந்து/
இறந்தும் உயிர்க்கும் உரமாய் எழுந்து/
விரிந்து கிடக்கும் விருட்சக் குடைகள்/
பரந்த பூமியின் அருட் கொடைகள்/

காற்றின் உரப்பில் பண் ணிசைத்தே/
காட்டு வெளியில் உல்லாசமாய் திரியும்/
வேரறுந்து தரையில் வீழ்கையில்/
பாருக்குள் முகம் புதைக்கும் வலியில்/

வண்ணப் பூக்களை நெஞ்சில் அணைத்து/
மண் ணுயிர்களுக்கே உணவும் தொகுத்த/
பொக்கிஷங்க ளின்று முதுமையின் நிழலாய்/
போக்கிட மின்றி வீழ்ந்தே கிடக்கின்றன/

மரணம் தொட்டால் கரணம் போடும்/
அரவணைக்க இங்கு யாரும் உண்டோ/
பருவம் உடைந்து கோலமும் சிதைந்து/
தத்துவமாய் சிறகுகள் இல்லாத சருகுகள்/

ஜன்ஸி கபூர் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!