About Me

2020/06/20

அனுபவக்கல்வியே தேவை

தன்னை  யறிதல் கல்வியென்றார் ஆன்றோர்/  
விண்  மண் இடைவினைப் புரிதலில்/
எண்ணும் எழுத்துக்களும் ஏடுகளை நிரப்ப/
கண் ஒளியில் அறியாமை  இறக்கும்/

அறிவால் கற்பவை வெறும் சொற்ககளே/
வெற்றிடங்களில் வீழும் விதைகள் போல/
வெறுமனே பயனற்றுப் போகும் செயலின்றி/
அறுந்த மணிகளாய் சிதறிக் கிடக்கும்/

சிரசோடு பொருந்தும் அறிவில் உயிர்ப்பில்லை/
கரமும் இதயமும் இணைந்திட்டால் செயலாகும்/
காந்தியும் சொன்னார் இயற்கையும் அழைக்கின்றதே/
காலத்தின் கல்வெட்டில் பதிவாகுமே அனுபவக்கல்வி/

பயன் குன்றிய கல்வி நமக்கெதற்கு/
பாரதியின் முழக்கத்திலும் மெய் யுண்டே/  
சந்ததி வழிக் கல்வி விழுமியங்களே/
சமூகத்தின் அச்சாணியாம் என்றும் தாங்கும்/

சூழும் கல்வியே சமுகத்தின் தேவைகளாம்/
வாழ்க்கையே கல்வி என்றே மொழிந்தார் ரூயி/
தொடர்கல்வியாய் தொடர்கின்ற அனுபவங்களே/
தொல்லையின்றி நம்மைக் காக்கும் தொழிற்கல்வியாம்/

இயற்கைச்சூழல் கற்றுத் தரும் இசைவாக/
இரசனையால் ஐம்புலனில் விரியுமே அனுபவங்கள்/  
தரிசனங்கள் காட்சிகளால் பிள்ளைகள் மனமும்/
கரிசனையுடன் விரும்பிக் கற்குமே எந்நாட்களும்/

ஞானத்துடன் வாழ்க்கையையும் கற்றிடவே/
அனுபவக்கல்வியே சிறந்ததென்றே/ 
நிறைவு செய்கின்றேன் தலைப்பினை/

ஜன்ஸி கபூர் - 19.06.2020

 கல்விப் புலத்தில் கனிந்த பழத்தின் கருத்து.
அனுபவக் கல்விக்கு ஆதாரம் அழகாகத் தருகின்றார்.
இந்தக் கருத்துகளை எடுத்து நோக்குவோம்.
நிலாமுற்றத்தில் முதல் கவியரங்குவென தலை நிமிர்ந்து பகிர்ந்தாலும் தக்க கருத்துப் பகிர்ந்தார்.
வாழ்த்துகள் கவிஞரே வருகைக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துகள்

நிலாமுற்றத்தின்
220 - வது
கவியரங்கத்தில்
அனுபவக்
கல்வியே சிறந்து என்று
கவிதையில் ஆயிரம்
சான்றுரைத்து
தாங்கள்
படைத்திட்ட கவிதைக்கு
நன்றி
வாழ்க தமிழ்
வாழ்க உங்கள்
தமிழ்பணி என்றே
வாழ்த்தி மகிழ்கிறது
நிலாமுற்றம்





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!