About Me

2020/06/18

தொட்டு விடும் ஈரமும் பேரின்பமே

 கொன்றல் கொஞ்சம் தூறல் பிழிய/
தென்றல் சிறகும் மெல்ல வருட/
வண்ணக்குடையும் கையில் சிலிர்த்தே பறக்க/
எண்ணம் மகிழும் தூறல் மழையில்/

கன்னம் உரசும் புன்னகை வாசம்/
சின்ன தேவதை கண்ணோரம் வீசும்/
கொஞ்சிப் பூக்கும் மழையின் நேசம்/
அஞ்சவில்லை தேகம் நனைய நிதம்/

தரையில் இறங்கும் நீர்ச் சிறையில்/
விரும்பிக் கிடத்தல் குழந்தைக் குணமே/
தொல்லை இல்லா பிள்ளை வாழ்வில்/
தொட்டு விடும் ஈரமும்  பேரின்பமே/

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!