About Me

2020/06/16

நீரைத் தேடும் உயிர்

தாவி யோடும் மேகங்கள் பிழிந்தே/
தூறல்கள் வீழுமே மனதும் பூக்குமே/
ஈரம் கசியும் காற்றில் நனைந்தே/
மரங்கள் மகிழுமே வாட்டம் தீருமே/

பாறை உருகும் வெயிலின் வலியில்/
தரைகள் உடையுமே தளிர்கள் சிதையுமே/
நிழலாய் வீழும் விருட்சக் குடைகள்/
அழிந்தே போக அகிலம் உடையுமே/

வரண்ட மண்ணும் உடைக்கும் வெடிப்பில்/
வேரும் மோதுமே பாரும் சாயுமே/
விண்ணும் கதறும் வெம்மை தணிக்க/
கண்கள் குளிருமே  மழையும் வீழுமே/

நீண்டு யர்ந்த கிளைகள் மோதி/
இருண்ட கொன்றல் மின்னல் வெட்டுமே/
இயற்கை உயிர்த்து பஞ்சம் நீங்க/
நீரைத் தேடும் உயிர்கள் வாழுமே/

ஜன்ஸி கபூர்  
  •  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!