About Me

2020/06/19

வழிகாட்டி


வழியறியாது தடுமாறும் விழியற்ற இளைஞனுக்கே/
விழியாகி வழிகாட்டும் ஊன்றுகோலாய் மாறும்/
அழகான கருணை யிங்கே தரிசிப்பாம்/
வளரும் பிள்ளைக்கோ இவன் வழிகாட்டியாம்/

வெள்ளைப் பிரம்போடு தானும் கைகோர்த்த/
வெள்ளை மனதின் நிழலு மிங்கே/
நல்ல பிள்ளைகள் வாழும் நம் பூமியில்/
உள்ளம் கசிகின்றதே மனிதத்திற்கு வயதுமில்லை/

பள்ளம் மேடும் தானறியாது நடக்கும்/
பாதையில் இடரும் துன்பம் கண்டதுமே/
இருண்ட உலகின் ஒளி விழியாய்/
விரும்பி வாழும் பிள்ளைக் குணம்/

அறமே என்றும் காத்து நிற்கும்/
வரமாய் அகிலம் போற்றி நிற்கும்/
சிறந்த தர்மமாம் பிறருக் குதவுதலே/
அருமையான வளர்ப்பென்றே உரத்துச் சொல்வேன்/

ஜன்ஸி கபூர் - 19.06.2020

 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!