About Me

2020/06/14

அந்தரத்தில் ஆடும் சிவப்பு நிலா


மொட்ட மரம் மெட் டிசைக்க/
கட்டி வச்ச ஊஞ்சலிலே நிதம்/
எட்டி நின்றே கொஞ்சிப் பார்க்கிறே/
வெட்கப்பட்டு கொஞ்சம் சிவக்கும் புள்ள/ 

மனசு மஞ்சள் வானமாய் நீளுதே/
கனவும் உனக்காகத் தவிக்குதே துடிக்குதே/
என் உசுருப் பூவைப் பிழிஞ்சேன்/
விண் தேடி தழுவுதடி மேகமாய்/ 

அனலாய் கொதிக்குது வானும் கடலும்/
அணைத்துக் கொஞ்சடி பனி வீசி/
ஓசோன் உடையுது தொற்றும் பரவுது/
ஒளிஞ்சுக்கலாமா கண்ணே வா வயல்வெளியில்/   

அந்தரத்தில் ஆடாதே அருகில் வாடி/
மந்திரப் புன்னகையில் மயங்கித்தான் போனேனே/
சந்திரவெளியில் உலாவ ஏங்குதடி மனசும்/
வந்து விடவா சொந்தமே நீதானே/ 


ஜன்ஸி கபூர்  



2 comments:

  1. வணக்கம்
    கவிதைமிக அருமை வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனங்களில் நிறைந்தவனே.: எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே சொந்த தமிழில் செந்தமிழ் பாடி அகிலம் வாழும் தமிழர் மனங்களில் நிறைந...

    ReplyDelete
  2. தங்கள் பின்னூட்டத்திற்கு மகிழ்வுடன் நன்றிகள்

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!