About Me

2020/08/06

அஃதாண்டு அவள் செய்தது


சோலைத் தென்றலில் சிறகுவிரித்த வாலைக்குமரியவள்/
காளையைக் கண்டதுமே காதலும் மலர்ந்ததுவே/  
கூர் விழிகளிற் இசைந்திட்ட காதலும்/
கூடியே களித்ததே மகிழ்வின் பேரொளியாய்/

கசிந்த காதலும் கனிந்ததே திருமணத்தில்/
கன்னி மனதை காளையும் வென்றான்/
இணைந்தனரே இன்பவெளியிற் இதயங்களும் சிரித்திடவே/
இல்வாழ்வின் அமுதத்தில் தித்தித்தனர் ஆருயிராய்/

மன்னவனும் பொருளீட்ட பிரிவதாய் சொன்னதும்/
மங்கையவள் துடித்திட்டாள் பிரிவின் வலியுணர்ந்து/
தொலைவிலவர் நீங்கிடின் மெலிந்திடுமே தோள்களும்/
வளையலுமே நழுவிடுமே கரங்கள் விட்டே/

உளத்துயர் தாங்கிடாதே உயிரதுவும் பிரிந்திடுமே/
உறவின் திசையினில் பாதங்களும் போகுமே/
உன்னதக் காதலின் குறிப்புணர்ந்த தோழியும்/
உரைத்தாலே தலைவனுக்கே தலைவியின் மனதினையே/

ஜன்ஸி கபூர் - 05.08.2020
யாழ்ப்பாணம் 





 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!