About Me

2020/08/05

வயலோரம் விளையாட வா புள்ள


வயலோரம் காத்திருக்கேன் மனசுக்குள்ளே பூத்திருக்கேன்/
வாறியாடி வெளையாட வரம்போரம் கோடிழுப்போம்/
சறுக்கிடாதே சேத்துக்குள்ள சிறுமீன்கள் துடிப்பிருக்கு/
கருவேப்பிலை வாசத்திலே கருத்தள்ளி போறவளே/

பருவத்தில வெளஞ்சிருக்கு வெண்டக்கா விரலப்போல/ 
துரும்பாக எளச்சிட்டேனே கரும்பே வந்துடடி/
இறுங்கும் வெளஞ்சிருக்கு குறும்பாய் பாத்திருக்கு/
இறுக்கி அணைச்சுக்கோடி இன்பம் கோடிதான்/

உச்சி சூரியன் இளகிப் போச்சே/
உழுத வயலும் காத்திருக்கு புள்ள/
உழுந்துக் கொடியும் உந்தன் இடையினில்/
தழுவுதடி நாத்துப்போல
தளிர்க்கொடியே வெட்கமேனோ/

சமைஞ்ச புள்ளே வெளஞ்ச நாத்தே/
சக்கரைத் தண்ணீ ஊறுதடி நாக்குல/
தேக்குமரம் வயலோரம் தேடுதடி என்னப்போல/
ஆக்கிடலாம் சிறுசோறும் அள்ளிப்போடு வாழயிலைல/

வெக்கம் ஏனோ வெள்ளரிப் பிஞ்சே/
பக்கம் வந்திடு மாமனும் சொக்க/
அக்கம் பக்கம் யாருமில்லை அன்பே/
அந்திக்குள் வந்திடு ஆனந்தம் நெறைஞ்சிருக்கு/

வடக்கில பரணிருக்கு மச்சானும் அருக்கிருக்கேன்/
குடத்தோட வந்திடடி கும்மியும் ஆடிடலாம்/
எட்டிப் பார்த்தால் யாரும்தான் பதுங்கிக்கலாம்/
கட்டழியே நமக்கிருக்கு நெல்லுமணித் தொட்டில்தான்/

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!