About Me

2020/08/03

எழுதாத வரம் நீ


விழிகளைத் திறக்கிறேன் வீழ்கிறாய் பார்வைதனில்/
தழுவுகிறேன் உனையே நழுவுகிறாய் நாணத்துடன்/
மெழுகுச் சிலையே உருகுகிறேனடி உன்னன்பில்/
விழுதாய் பற்றுகிறேன் உனையே என்னுள்/

புன்னகைச் சரந்தொடுத்த உந்தன் வதனமதில்/
அன்பும் சுவைத்தேன் ஆருயிரும் வருடவே/
தென்றலின் வாசம் நனைத்த மூச்சுக்குள்/
நின்றேன் உந்தன் சுந்தர சுவாசிப்பாய்/ 

இருள் நனைக்கும் கனவெல்லாம் உயிர்த்தாய்/
இதயவெளியில் இணைந்திட்ட உறவாய் முகிழ்த்தாய்/
இன்பச் சாரலிலும் நனைந்திட்ட அமுதுமானாய்/
இணைந்தாய் நீயே எழுதாத வரமாய்/

ஜன்ஸி கபூர்
 



 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!