About Me

2020/08/03

ஈன்றவள் மடியே இறைவனின் கோயில்



கருவறைத் தொட்டிலினில் குறையின்றி ஈன்றவளே
அரு உயிரையும் காத்திட்டாள் அமுதாய்
மருதாணி வாசத்தில் அன்பினைக் குலைத்தே
தருகின்ற தாய்மையில் இறையோனின் பரிவு

அல்லல் தொடர்கையில்; களைந்திடும் துடிப்பில்
தொல்லைகளும் விரண்டோடும் கனிவின் மனங்கண்டே
கல்லும் கரைந்திடுமே தாய்மைப் பண்பினிலே
சொல்லேதுமுண்டோ அன்னைக் கீடாய் இவ்வுலகில்தான் 

கொடுந்தணலும் குளிரும் தாயவள் நிழலில்  
வாட்டிடும் துன்பமும் வடிந்திடுமவள் பரிவினில்
தேடும் பார்வையும் குவித்திடும் நினைவுகளை 
 நாடுகின்ற தாய்மடிதான் புனிதமான இறைகோயில் 

ஜன்ஸி கபூர் - 03.08.2020









No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!