About Me

2020/08/04

வாழ்க்கை வாழ்வதற்கே

தள்ளாடும் முதுமை  தளராத தன்னம்பிக்கை/
உள்ளத்து உறுதி  உடைந்திடாத உயர்வு/
எள்ளி நகையாடுவோர் புறந்தள்ளும் வீரம்/
வெள்ளமாய் வழிந்தோடும்   வியர்வைக்குள் வாழ்க்கை/

ஈருருளி உருளுகையில்  உயிரேந்தும் மூச்சில்/
ஈரமாய் படியுமே  ஏழ்மையின் சுவடே/
இரவும் பகலுமறியாத   சுமையேற்றும் உழைப்பினில்/
இணைந்திட்ட உறவுகளும்  வாழப் பழகுமே/

அடுத்தவர் தயவேந்தா  ஆணிவேராய் மனசும்/
வடுக்களை உரித்தெடுக்கும்  பக்குவமும் வளர்ந்திருக்கு/
பாடுபட்டு உழைப்பதெல்லாம்  எண்சாண் உடம்பிற்கே/
தடுமாற்றம் காணா  எளிமைக்குள்ளும் உயர்விருக்கு/

ஜன்ஸி கபூர் 
 




 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!