About Me

2020/08/05

காதோடு குழையாட


காதோடு குழையாட கன்னமெல்லாம் நாணமா/
கருத்தோடு இசைந்த புள்ள கண்ணம்மா/
கரும்புக் காட்டுப் பக்கம் தான் வாறியா/
அரும்பியிருக்கிற ஆசகளத்தான் பேசிடலாம் கண்ணால/

ஒத்தயடிப் பாதையில ஒய்யாரமாய் நடக்கையில/
சித்தமெல்லாம் ஒன்மேலதான் சாயுதடி செல்லம்மா/ 
சிக்கினேனடி உன்னிடம்தான் விக்கலெடுக்குது நெனவுக்குள்ள/ 
பக்கம் வந்து பேசடி மாதுளம்பிஞ்சே/ 

தாமரை மொட்டெடுத்த சாற்றிலதான் ஒடம்பிருக்கு/
சாமத்து கோழிபோல  நீளுறே கனவுக்குள்ள/
பூமரத்து வாசம் நெஞ்சுக்குள்ள பேசும்/
பூமாதேவியும் பூரிப்பா ஒன்னப்பாத்து மனசுக்குள்ள/ 

சொப்பனச் சொக்கியே மச்சான மயக்கித்தானே/
சொல்லாமப் போறியே ஆத்துப்பக்கம் தனித்துதான்/
மல்லிகை வாசம் மனசோட பேச/
அல்லியே வாறேன்டி உந்தன் பின்னாடி/

ஆக்கத்தான் பொறுத்திட்டேனே ஆறத்தான் பொறுக்கலயே/
ஏக்கங்கள் வெட்டுதடி எந்தன் நெஞ்சுக்குள்ள/
ஏழு மணிக்குள் வந்திடி ஏலத்தோப்புக்குள்ள/
விழுந்திட்ட மனச இழுக்கிற ஒனக்குள்/

நீயும் வாழும் நெஞ்சக்கூடு தனியாத்தாயிருக்கு/
சாஞ்சிட தோளத் தந்திடடி சொகமாயிருக்கும்/
கொஞ்சிடும் குழைதான் மிஞ்சிடுது அழகில்/
வஞ்சியே வாக்கப்படு தவிப்படங்கும் நெஞ்சுக்குள்ள/

ஜன்ஸி கபூர் 
 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!