About Me

2020/08/05

வான வீதியில் பறக்க வா


தனிமைச் சிறை நீள்கின்றதே தவிப்புடன்/
தாவும் நொடியெல்லாம் பூக்கின்றதே அக்கினியாய்/
இனிமைத் துடிப்பெல்லாம் சிதைகின்ற இதயத்தில்/
இன்னலும் உருகிடுதே விழிநீர் வெம்மைக்குள்/

கன்னச் சிவப்பும் குறுநகை விழியசைவும்/
என்னைத் துளைக்குதடி காதலும் சுகமாக/
இன்பத்தின் வாசலாய் வானம்தான் நமக்கிருக்கே/
அன்றிலே உந்தன் சிறகாய் நானே/

ஜன்ஸி கபூர் - 05.08.2020



 


 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!