About Me

2020/07/15

காமராசர்

மனம் மதிக்கும் மாண்பாள னாய்
மாநிலம் ஆண்டார் தலைவ னாய்
கனவதும் மெய்ப்பட கருத்திட்டம் வகுத்தே
காலத்தின் நினைவிலே நீண்டார்
கல்லாமை ஒழித்தே கல்வியைப் புகட்டியே
காவிய நாயகனாகவே உயர்ந்தார்
இல்லாத பிள்ளையர்க்கே இன்னல் களைந்திட
ஈகையாய் சத்துணவையுமே தந்திட்டார்
தன மில்லாப்  பிள்ளை யரும்
தானமாக் கொண்டனரே உணவினை
தினம் தீட்டினார் நலவாழ்வு தனை
தியாகச் சுடரு மானாரே



ஜன்ஸி கபூர்   


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!