About Me

2020/07/14

தாயின் மடியில்

அமிர்தமாய் இனித்திடும் தாயின் நிழலினிலே
அடங்கிக் கிடத்தலும் பெருஞ் சுகமே
அருஞ்சுவைப் பாலதை உதிரத்தில் பிழிந்தே
அன்போடு ஊட்டிடுகையில் ஆட்கொள்ளுதே ஆனந்தமும்

ஈன்றவள் நெஞ்சின் ஈரச் சுவடுகள்
ஈர்ப்போ டிசைந்தே தொடர்கிறதே கருணையாய்
ஈந்திட்ட பொழுதெல்லாம் தன்னலம் பாராமல்
ஈடில்லா உறவாகி சுமக்கின்றதே   அழகாய்

இடுக்கண் களைந்தே இன்ப மூற்றி
இதயத்தின் அலைவுகளில் மூச்சாகும் தாய்மை
பொருந்திட்ட அன்பினாலே பெருந்துயர் துடைத்தே
பொல்லாத நோய்க்கும் மருந்தாகிக் காக்கும்

உணர்வோடு உடலையும் பிழிந்தூற்றி பூரிப்பில்
உயிர்த்தெழுகின்ற உன்னத தாயின் காலடியில்
உறைந்திருக்கும் சொர்க்கத்தை தினம் கண்டேனே
உலகமே அடைக்கலமே தாயின் மடியினிலே

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!