About Me

2020/07/17

நாளைய வாழ்விற்காய்


விரலுக்குள்ளோ விஞ்ஞானம் பழமையோ விலகியோடும்
விவசாயப் பற்றின்றி வரட்சியோடு வயலோரம்
மாற்றம் கண்டாலே முன்னேற்றங்கள் வென்றெழும்
ஏற்றங் காணவே வயலுழும் சிறார்களிங்கே

மழை வாசம் மண்ணோடு குலைந்திருக்க
மனசெல்லாம் சிறகடிக்கும் நாற்றும் தழுவ
தொற்றுக்கள் தந்த விடுமுறையி லிப்போ
பற்றுடன் பஞ்சம் தீர்க்கும் முயற்சியோ

சின்ன விழிகள் வீழ்த்தும் கனவுகள்
சிதையாமல் வளர்த்திடுமே புதுத் தொழினுட்பமும்
உழவுத் தொழிலை வந்தனை செய்தால்
வாழும் வாழ்க்கையும் என்றும் வசந்தமே

ஜன்ஸி கபூர் - 16.07.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!