About Me

2020/07/16

மழை இன்பம்


விண்மீது முகிலோட்டம் நீரள்ளி யூற்றும்/
மண்ணோடு மழைநீரும் மனசொன்றிப் போகும்/
எண்ணங்கள் குளித்திட கன்னங்களும் குளிர்ந்திடும்/
வண்ணப்பூக்கள் மழையள்ளிப் போகின்றன மகிழ்வோடு/

வெள்ளாடைக்குள் சகதிப் பூக்களின் கும்மாளம்/
வெட்க மறியாத சிட்டுக்களின் உலகமோ சிரிப்புக்குள்/
வெட்டும் மின்னல் கொட்டும்போது அச்சமும்/
முட்டுமே மனதினில் தேகமும் மறைவுக்குள்/

பள்ளி போகும் பாதித் தூரம்/
துள்ளி வழியும் தூற்றல் மழை/
வாழையிலைக் குடையு மாடும் குதூகலத்தில்/
பிள்ளைக் கின்பம் ஊட்டுதிந்த மழை/

ஜன்ஸி கபூர்  



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!