About Me

2020/07/15

வானம்பாடிகள்

பள்ளி வாழ்வின் அற்புத தருணங்களாய்
உள்ளம் அள்ளும் நட்பின் வாசம்
துள்ளியாடும் குறும்புச் சுவையினில் மெய்மறந்தே
அள்ளி யணைக்கும் இயற்கையின் பசுமைக்குள்

ஓய்வினைக் கண்டுவிட்டால் ஓடிப்போகும் கால்களும்
ஒன்றுகூடி வயலோரம் விளையாட்டில் ரசித்திருக்க
காற்றும் தலையசைத்தே நாற்றும் கரமசைக்க
சேறும் பிடித்திருக்க உயர்ந்திருக்கு மரப்பாலம்

மிதிவண்டி சாகசமோ நீரோட்டச் சாதனையோ
மிளிரும் சிரிப்பினில் அகம் தெய்வீகமாகும்
குவளை நீரூற்றி களித்திடும் மனமெல்லாம்
குதூகல கீதங்களை இசைத்திடும் வானம்பாடிகள்

ஜன்ஸி கபூர்   



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!