About Me

2020/07/16

தாயின் மடியில்

அமிர்தமாய் இனித்திடும் தாயின் நிழலினுள்/
அடங்கிக் கிடத்தலும் பெருஞ் சுகமே/
அருஞ்சுவைப் பாலதை உதிரத்தில் பிழிந்தே/
அன்போடு ஊட்டுகையில் ஆட்கொள்ளுதே ஆனந்தமும்/

ஈன்றவன் நெஞ்சின் ஈரச் சுவடுகள்/
ஈர்ப்போடிசைந்தே தொடர்கிறதே கருணையாய்/
ஈந்திட்ட பொழுதெல்லாம் தன்னலம் பாராமல்/
ஈடில்லா உறவாகிச் சுமக்கிறதே அழகாய்/

இடுக்கன் களைந்தே இன்ப மூற்றி/
இதயத்தின் அலைவுகளில் மூச்சாகும் தாய்மை/
பொருந்திட்ட அன்பினாலே பெருந்துயர் துடைத்தே/
பொல்லாத நோய்க்கும் மருந்தாகிக் காக்கும்/

உணர்வோடு உடலையும் பிழிந்தூற்றி பூரிப்பில்/
உயிர்த்தெழுகின்ற உன்னத தாயின் காலடியில்/
உறைந்திருக்கும் சொர்க்கத'தை தினம் கண்டேனே/
உலகமே அடைக்கலமே தாயின் மடியில்/

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!