About Me

2020/08/25

வீரபாண்டிய கட்டபொம்மன்



வீரமே சிம்மாசனமாய் வீற்றிருந்த மாவீரன்/

வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டான் ஆங்கிலேயரை/

நாயக்கர் குலத்தின் வீரிய வம்சமிவர்/

நற்பரிசாம் முன்னோர்க்கு பாஞ்சாலங் குறிச்சியே/


அகத்தினில் அச்சமேது கெட்டிபொம்மு பெயரிலும்தான்/

அகவை முப்பதில் அரசேறினார் பாளையக்காரராக/

பதினெட்டாம் நூற்றாண்டு பாருமே வியந்திட/

பக்குவமாய் ஆண்டரே பண்பின் வழியினில்/


வெள்ளையரும் வெருட்டினர் உள்ளமதை வருத்தித்தான்/

கொள்ளை இலாபம் அள்ளினர் வரியினில்/ 

ஆதரிக்கா வீரனாய் எதிர்த்தே நின்றார்/

அகிலத்தின் பார்வைக்குள் அதிசயத்தில் பூத்தார்/


ஜாக்சன்துரை தலைமையிற் தொடுத்தனர் போரை/

ஜாதிமல்லிப் பூவாய் காத்திட்டார் மண்ணை/

ஜாக்சன் துரை தீட்டிய தந்திரமெல்லாம் / 

முறியடித்தார் கட்டபொம்மன் முகவரியுமானார் பாஞ்சாலங்குறிச்சியினில்/


ஆலோசித்தனரே வஞ்சகத்தில் மன்னனை வென்றிடவே/

கட்டபொம்மனும் காலத்தின் வலிமையில் தோற்றாரே/

பானெர்மன் தலைமையில் பெரும்படை திரண்டதுவே/

பாசிசங்கள் வலியினில் வெளியேறினார் மன்னருமே/


முற்றுகையின் வலிமையில் சிதைந்ததே கோட்டையும் /

உறுதிக் கோட்டையும் இறுதியில் தோற்கவே/

வெளியேறினார் கட்டபொம்மனும் கைதானார் விஜய ரகுநாதனால் /

வென்றனர் எதிரிகளும் கொன்றனர் வீரத்தினை/


வஞ்சக வெற்றியால் அஞ்சாத மாமலையும்/

நெஞ்சம் துடிக்க தூக்கிலடப்பட்டாரே வெள்ளையரால்/

மனசுக்குள்ளே நிறைந்த மங்காப் புகழோன்/

மண்ணுக்குள்ளே எருவானான் கண்ணுக்குள்ளே சோகமே/


ஜன்ஸி கபூர் 




 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!