About Me

2020/08/24

குறளோடு கவிபாடு

குறள்:-605

 

' நெடுநீர்_மறவி_மடிதுயில்_நான்கும்  கெடுநீரார்_காமக்_கலன் 

 

சிந்தைக்குள் விரிந்திடும் சிந்தனைகளின் தொழிற்பாடு

சந்தர்ப்பங்கள் இழக்கின்றனவே காலத் தாமதிப்பினால்

விந்தை யுலகின் விளைச்சலில் இன்புறவே

மாந்தருக்கும் வேண்டுமே நேரத்திற்கான செயலூக்கம்


செய்கின்ற காரியங்கள் செயலிழக்கும் சோம்பலினால்

சாய்ந்திடலாமே  நாமும் சுறுசுறுப்பின் உழைப்பினில்

நினைவுகள் உதிர்கையில் மறதியும் நீளுமே

நினைவாற்றல் வளர்கையில் பேராற்றல் வாழ்வினில்


சுகமிழக்கும் தூக்கமே தூக்குமேடை ஆரோக்கியத்திற்கு

சுகமழிக்கும் தீயவற்றை களைகையில் பேரின்பமே


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!