About Me

2020/08/23

காதோரம் பேசுகையில்

 


விழிகளின் காதலும் மொழியினை மறந்திட

அழகிய தனிமைக்குள் உருகுகின்ற இதயங்கள்

இழுத் தணைக்கும் அவன் சுவாசத்தில்

இதழுக்குள்ளும் உறைந்திடுதே வெட்கப் புன்னகை    


தழுவிக்கிடக்கும் காதலும் பிழிந்தூற்றுகிறது மயக்கத்தினை

வருடுகின்ற தென்றலவன் கன்னத்தில் விதைக்கும்

பருவத்தின் துடிப்புக்களோ மெல்லிய காமத்தினுள்

இரு மனங்களும் ஏக்கத்தின் பிழம்புகளாக


இடை நசித்து இடமாறும் சுகங்கள்

காதோரம் பேசுகின்றன தித்திப்பின் சுவையோடு


ஜன்ஸி கபூர் 0 22.08.2020

யாழ்ப்பாணம்



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!