About Me

2020/08/25

காதல் சங்கீதமே

விழி மொட்டுக்களின் வாசத்தில் காதல்/

விழுகின்றதே சுகத்துடன் உணர்வினைப் பிசைந்து/

தழுவுகின்றாய் உயிருக்குள்ளே உன்னையே விதைத்து/

நழுவுகின்றதே நாணத்தால் எந்தன் நிழல்தானே/


காத்திருப்பின் அலைவரிசைக்குள் மொழியின்றதே வசந்தமும்/

போத்தியிருக்கும் பெண்மைக்குள்ளும்; புளாங்கிதத்தின் தூறல்கள்/

காத்திருப்பின் சுகத்தினில் ஆள்கின்றாயே நினைவுகளால்/

காதல் சங்கீதமே இசைக்கின்றாயே எனையே/


பிறை நுதலில் விரலின் விம்பங்கள்/

சிறைபிடிக்கிறதே சந்தனத்தைக் குலைத்து குதூகலமாய்/

சிறகடிக்கும் வண்ணத்தில் மகிழ்வின் ரேகைகள்/

உறவாகி இணைந்திருப்போம் ஆனந்தத்தின் அழகோடு/


திலகமிடும் கரங்களை நீயும் பற்றுகையில்/

தித்திக்கிறதே இதயமும் உந்தன் அருகாமையில்/

இல்லற சுகத்தினில் ஆயுளும் நீண்டிடட்டும்/

இன்பத்து வானில் பறந்திடுவோம் அன்றில்களாய்/


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!