About Me

2020/08/23

விரிகதை



உணர்வுகள் வடிக்கின்ற எழுதுகோல் மனம்தானே

அவளுக்கு இன்றாவது எழுதிவிட நினைக்கிறேன்

அவள் தூரத்து உறவுப் பெண்

மணம் கண்டும் வாடிக் கிடக்கின்றாள்

தன்னை நிராகரித்த அவனுக்காக பேதலிக்கிறாள்

முட்டாள் பெண்ணே சினம் எனக்குள்ளேறுகிறது.   

வெள்ளைக் கடதாசிகளை பற்றுகின்றன கரங்கள்

இன்றாவது சில வரிகள் அவளுக்காக.


சிந்தையை சீர்படுத்த முன்றலுக்குள் ஒன்றிக்கொண்டேன்

கலகலத்தன சிட்டுக்குருவிகள் படபடத்தன சிறகுகள்

அவள்மீதான கோபம் கொஞ்சம் கரைந்தது.

சிட்டுக்களின் குரலொலி கைபேசி அழைப்புமணியாயிற்றே

பட்டென்று சிந்தைக்குள் அது உரைத்தது.


வைத்தியரின் மருத்துவ சந்திப்புக்கான நாள் குறித்தல்

கைபேசி இலக்கங்களைச் சுழற்றும் நேரம்

வாசல் மணி உரப்புடன் அழைத்தது.

செயலும் அற விரைகின்றேன் வாசலோரம்.


குறுக்கே அம்மா தேநீரை நீட்டியபடி

நீராவி  சுவாசித்த தேநீர் ருசியினை

உறிஞ்சிட முனைகையில் மகளின் சிணுங்கல்


நடைபெறவுள்ள பரீட்சைக்கான ஆயத்தப்படுத்தலுக்கான அழைப்பது

சிந்தனைகள் அறுகின்றன முழுமையின்றி எனக்குள்


அவள் மீண்டும் நாளையாகி தொலைவாகின்றாள்

கைகள் பற்றிருந்த காகிதங்களோ பட்டங்களாக

நானும் சற்றுத் தள்ளாடித்தான் போனேன்.


ஜன்ஸி கபூர் -22.08.2020

யாழ்ப்பாணம்.



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!