About Me

2020/08/25

ஆசையிலோர் கடிதம்

 கடிதத்தின் இதழ்களில் ஒற்றினேனே இதயத்தினை

மடியில் சாய்கின்றன உந்தன் நினைவுகளும்

துடிக்கின்றதே எந்தன் விழிகளும் சுகத்துடன்

படிக்கின்றதே அன்பும் நம்மையும் ரசித்தே

விடிகின்ற பொழுதெல்லாம் காதல் மொழியினில்

வடிகின்ற கவியிலும் வீழ்கின்றாயே வார்த்தைகளாய்  


ஜன்ஸி கபூர் - 28.08.2020

யாழ்ப்பாணம் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!