About Me

2020/08/25

ஏர் பிடித்து உழுவோம்

ஏர் பிடித்து உழுவோம் நாமே/

சுற்றமும் உயிர்க்கும் இயற்கை வாசத்தினில்/

ஏற்றம் காணும் வாழ்வோடு இணைவோமே/

பற்றுமே விளைவும் வாழ்வையும் உயர்த்தி/


கழனிக்குள் புதைத்திடும் நெல்லின் சுவாசத்தினில்/

தழுவுகின்றதே மனமும் மகிழ்வைச் சுமந்து/

உழுதிடும் நிலத்தினில் பயிர்களின் சிரிப்பு/

வாழ்ந்திடலாம் தினமும் மண்வாசத்தை நுகர்ந்தே/


கலப்பையின் கலகலப்பில் நாற்றுக்கள் ஆடும்/

கவலையின் துடிப்பும் தென்றலில் கரையும்/

வழிகின்ற வியர்வைக்குள் உழைப்பும் குவியும்/

வரம்பெல்லாம் வரமாய் நெல்மணிகள் விளையும்/


காய்ந்திட்ட மண்ணுக்குள் ஏரினைப் பூட்டி/

கருணை பூமிக்குள் நீரினைப் பாய்ச்சி/

பருவ விதைகளால் உழவும் செய்தே/

விரும்பும் பூமியாய் உலகையே மாற்றுவோம்/


ஜன்ஸி கபூர்  

 

 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!