About Me

2020/08/26

நா(ண)ளைய உலகம்

விருட்சத்தின் விருந்தோம்பலாய் பூமிக்குள் பசுமை/

விரும்பியே வளர்த்திடலாம் மரங்களை வரமாக/

பருவ மழையின் விளைச்சலாய் குளிர்மையும்/

தருமே மகத்துவமான வாழ்வினை நமக்கே/


வேரறுப்பின் வலியில் துளையிடுமே வான்படையும்/

ஊரோரம் தனலாகுமே வெய்யோன் கதிர்களும்/

வறட்சி ரேகைக்குள்ளே உருமாறிடும் மண்வளமும்/

இறப்பின் எச்சங்களாய் சிறப்பின்றி மாறிடுமே/


அழகும் கரைந்தோட நீரோடைகள் வற்றுமே /

அகிலத்தின் உயிர்ப்பும் மூச்சறுந்தே வீழ்ந்திடுமே/

அற்புத பூமிக்குள்ளே அவலம்தானே செயற்கையும்/

ஆரோக்கியமாகட்டும் உயிர்களும் அணைத்திடுவோம் இயற்கையை/


ஜன்ஸி கபூர்  

 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!