About Me

2020/08/25

நீ வருவாயென

மனதின் வலியும் உதைக்கிறதே மலையாகி/

கனவின் வனப்பும் சுற்றுகின்றதே அனலோடு/

நினைவின் ஈர்ப்பும் நீளுகின்றதே உன்னோடு/

வனப்பான வாழ்வும் கிழிகின்றதே சோகங்களாய்/


எட்டுத் திசைகளும் விரித்தனவே சிறகினை/

ஏக்கத் துடிப்பினில் அலைகின்றேன் தினமதில்/

பூத்திருந்த விழிகளும் வியர்க்கின்றனவே கண்ணீரில்/

பார்த்திருக்கும் பாதைக்குள்ளே காணவில்லையே உனையே/


சொத்தாய் கொண்டேனே உனையே உயிருக்குள்/

காத்திருக்கிறதே நெஞ்சும் நீ வருவாயென/


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!