About Me

2020/08/24

தென்றலே நீ பேசு

மனதுக்குள் தூறலாய் வருடுகிறாய் என்னை/

கனவுக்குள்ளும் விழிக்கிறாய் உணர்வினைப் பிழிந்தே/

நனவின் உயிர்ப்பினில் இசைந்துவிட்ட தென்றலே/ 

இனிமையைப் பூசவே இதமாகத் தழுவு/


நீள்கின்றதே தனிமையும் நீயின்றி நிஜமாக/

ஆள்கின்றாய் என்னையே சுவாசத்திலும் சுகமாக/

தேள் வதையே நீயில்லாப் பொழுதெல்லாம்/

தேன் அமுதாய்  உந்தன் வார்த்தைகளே/


தேடுகின்றேன் தினமும் உந்தன் நிழலினை/  

நாடுகின்றேன் உன்னை எந்தன் வாழ்வுக்குள்ளே/

வாடுகின்றேன் நீயின்றி வேரறுந்த வலியினில்/


மெல்லப் பூத்திருக்கும் நாணத்தின் அழகினில்/

மெல்லிய கன்னத்திலும் செந்நிறப் பிறையோ/

வெள்ளிக் கொலுசொலிக்குள் எந்தன் துடிப்பொலியே/

உள்ளத்தின் தென்றலே நீ பேசு/


ஜன்ஸி கபூர்  

 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!