About Me

2020/08/15

விடுதலை

 சுதந்திரக் காற்றே சுவாசத்துள் நீ/

சுற்றங்களின் அணைவில் மணக்கிறதே விடுதலையும்/

சுதந்திர உணர்வின் விருட்சத்தில் நாடும்/

சுபீட்சமாக வாழ நனையுது அபிவிருத்தியில்/


ஏகாதிபத்திய தலைமையை எதிர்த்திட்ட தியாகமே/

ஏந்துகிறதே சுடரினை எதிர்காலமே ஒளியில்/

இதயங்கள் வருந்திட சிறைக்குள்ளும் பூத்தனர்/

இன்னல்கள் விளைந்திட பெற்றோமே உரிமைகள்/


உதிரங்கள் ஊற்றி உயிர்களையும் நட்டி/

உணர்ச்சிகளின் எழுச்சியில் உருவானதே விடுதலை/

பிணக்குகள் மறந்து இன்முகம் அணிந்து/

காத்திடுவோம் நம் வளமான பூமியே/


ஒற்றுமையில் உழைக்கும் உற்சாகக் கனவு/

ஓயாது மலர்கையில் விழிப்புணர்வும் மலருமே/

வெள்ளையரின் கோட்டையை கைப்பிடித்த சாதனையே/

உள்ளத்திலும் ஒலித்திடும் சரித்திரத்திலும் பதிந்துவிடும்/


ஜன்ஸி கபூர் - 05.08.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!