About Me

2021/04/21

பிஞ்சுகளின் தேடல்

 

நெஞ்சத்தின் வேதனை கிழிக்கின்ற மனதும்/
அஞ்சுகின்றதே தினமும் வலியினைக் கண்டே/
பிஞ்சின் கனவுகளைச் சிதைக்கின்ற மானிடர்களின்/
வெஞ்சமரில் வேகுதே விளையாட்டுப் பருவம்/

துளிர்க்கின்ற உணர்வுகளைப் புரிந்திடாப் பெற்றோர்கள்/
அளிக்கின்ற சுமைகளில் கருகுகின்றதே ஆசைகள்/
உளியாகும் விரல்கள் செதுக்கின்ற புதுமைகள்/
ஊக்கம் காணாமலே ஊமையாகி முடங்குதே/

படிக்கின்ற வயதில் வடிக்கின்ற கண்ணீர்/
படியுதே வாழ்வினில் முட் சுவடுகளாக/
சிறகுகளை நனைக்கும் உழைப்பின் வியர்வையால்/
சிறார்களின் எதிர்காலம் விடியலின்றி இருளாகுதே/

வறுமையும் வாட்டமும் முடிவில்லாமல் தொடர்கையில்/
வழி தெரியாப் பயணத்தில் பாதங்கள்/
அழிகின்ற வண்ணங்களாய் ஆகுகின்றதே இன்பங்கள்/
அனலுக்குள் தவிக்கின்றதே தேடல் பாதைகள்/

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!