About Me

2021/04/21

உன் விழிகளால் மொழி பேசு

மனசு மெல்ல உதிர்கின்றது
உன்றன் காந்தப் பார்வையில்!

நீயென்ற ஒற்றைச் சொல்லுக்குள்
நானடங்கிப் போகின்றேன்!

என் தனிமை 
இப்போதெல்லாம் உன்னால்
நிரம்புகின்றது!

வெறுமைக்குள் அலைகின்ற உயிருக்குள்
பதிக்கின்றாய்
உன்றன் பாதச் சுவட்டினை!

உன் அன்பான வம்பில்
இரகசியமாக நாணமல்லவா தெறித்துச் செல்கின்றது
 சுகமாக!

காதலும் மோதலுமாக நகரும்
நம்
அன்பில் உயிர்பெறுகிறது ஊடல்!

எனை நீயும் 
நினைவுகள் உயிர்ப்பிக்கையில்
காத்திருக்கின்றேன் கனவுகளுடன்!

காற்றின் துளைகளுக்குள் 
நிரம்பியிருக்கின்ற உன்னையே
இப்போது
சுவாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன்!

அடடா...
வெட்கப்படும் உன் புன்னகையை
ரசிக்கின்றேன் இரகசியமாக!

உன் நினைவுக்குள் தரித்திருக்கும்
என்றன் உணர்வுதனை உயிர்ப்பூட்ட 
தினமும் நீயும்
உன் விழிகளால் மொழி பேசு!

 ஜன்ஸி கபூர்   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!