About Me

2021/04/21

நாடோடி வாழ்க்கை

பிறப்பும் இறப்பும் வெட்ட வெளிதனில்/
சனநடமாட்டத் தளங்களே வாழ்க்கைக் கூடங்களாக/
எல்லையின்றிப் பறக்கின்ற சுதந்திரப் பறவைகள்/
நாகரிகம் தொலைத்த பழங்குடிகளே இவர்கள்/

இயற்கைக்குள் இசைந்த வாழ்க்கைப் பயணத்தில்/
இணைக்கிறதே வாழ்வியலும் போராட்டங்களைத் தினமும்/
எளிமையான வாழ்வுதனை எழுதுகின்ற விதியால்/
ஏக்கங்களைச் சுமக்கின்றனர் கனவுகளை உதிர்த்தபடியே/

நானிலத்தின் விரிகோடுகள் இணைக்கின்ற பயணத்திலே/
நாற்புறமும் சொந்தங்கள் உதிர்கின்றனவே வாழ்வியலில்/
கருவோர உயிர்ப்பும் தெருவோரம் உதிப்பதனால்/
வருத்துகின்றதே எதிர்காலமும் சிதைக்கின்றதே எதிர்பார்ப்புக்கள்/

திசையறியாத இறக்கைதனைப் பற்றிடும் நகர்வில்/
வசையும் இசைக்காதே சொத்தில்லா வாழ்க்கைக்கே/
அன்பினைப் பற்றிடும் மானுடச் சிற்பங்களாக/
அகிலத்தில் விதைக்கப்படுகின்றனர் தனிமைதனை இரசித்தபடி/













குடைகளாகும் மரங்கள்தானே  கூடுகளாகிக் காக்குதே/
விடையில்லாத போராட்டங்களே முகவரியாகும் வாழ்க்கையிலே/
கொட்டும் மழைதனில் கரைந்திடாத் தேகமே/
தொட்டுக் கொள்ளுதே கொளுத்தும் வெயிலையும்/

எல்லையும் பிரித்திடாத் தேசத்தில்தானே தினமும்/
எழிலோடு பூக்கின்றோம் பழங்குடி நாமென்றே/
உதிரும் ஏக்கமெல்லாம் பூக்கின்றதே கனவென/
உவகையின்றியே பயணிக்கின்றோம் அவலத்தினை யேந்தியே/

நானிலப் பயணத்திலே தன்மானம் காத்தே/
நற்குடியாகிப் பரவுகின்றோம் சொந்தங்களும் இன்றியே/
தெருவோர வாழ்க்கையும் தொல்லைதானே எமக்கே/
வருந்தினாலும் சிறக்கின்றோமே எதிர்பார்ப்புக்களையும் சுமந்தே/ 

திசையறியாமலே பறந்தே தானே உயிர்க்கின்றோம்/
திரும்பும் இடமெல்லாம் அணைக்குதே இயற்கையும்/
அன்பினை நேசித்தே ஆளுகின்றோம் இதயத்தையே/
அகிலத்திலே விளைகின்றோம் நாடோடி மக்களாகி/

ஜன்ஸி கபூர்
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!