About Me

2021/04/22

மணிமுடி


 
புரட்டுகின்ற நூலும் 
        புதையலே சிந்தைக்கு/
புத்துணர்ச்சி தரும் 
        எண்ணங்களும் எழுதுகோல்களே/


புத்தாக்கச் சிந்தனையும் 
        செதுக்குமே வெற்றிகளை/
புது வழியைக் 
       காட்டிடுமே கல்வியும்/


சிரசேந்தும் அறிவில் 
       ஒழியுமே அறியாமையும்/
சிந்தையின் செயல்களில் 
      அனுபவமும் விரியுமே/

உனதான உரிமைகள் 
      உனைச் சேர்கையில்
உணர்வுக்குள் சுதந்திரமும் 
     உனை ஆளுமே

துணிச்சலின் முகவரியில் 
      முயற்சிகள் சேர
துணிந்த செயலினில்
       வலிமையும் கோர்க்க/ 

உறவுதனை அணைத்து 
      அன்பினை மொழிந்து/
கரும்பாய் இனித்திடும் 
      நடத்தையால் ஆளு/

கற்ற கல்வியால் 
      பெற்றிடுக மதிப்பும்/
சுற்றமும் போற்ற 
      ஏற்றமே எதிர்காலமாக/

மனிதம் சூட்டிடும் 
     மணிமுடி உன்னிலே/
இனிய வாழ்வும் 
      வளமான எதிர்காலமும்/

ஜன்ஸி கபூர்  


 பின்னூட்டம்

கவி பா.மா சேகர்
 
ஜன்ஸி கபூர் ஒவ்வோர் வரியிலும் ஓர் உன்னத நம்பிக்கையின் இழையோட்டம் மிளிர்வது படைப்புத் திறனுக்கான முதல் முத்திரை!
நேர்த்தியான சிந்தனைகளும் 
தெள்ளிய நீரோட்டம் போன்ற துல்லிய சொற்கோர்வைகளும் தங்கள் ஆளுமைக்கான சிறப்பம்சமாய்த் திகழ்கிறது!
மேன்மேலும் இவ்வாறான செறிவான கருத்துக்கள் அடங்கிய படைப்புகளை வழங்கித் தன்னிகரற்ற படைப்பாளராய்த் தமிழ்தொண்டில் சிறந்திட நல்வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே!!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!