About Me

2021/04/21

கூடு ஒன்று காத்திருக்குது

 


நவீனத்  தேடல் உதிர்க்கும் தொழினுட்பம் 

நாடித்துடிப்பை அறுக்கின்றதே உயிர்க்கும் விருட்சங்களில் 

பட்டுப்போன கிளைதனில் மொட்டென விரிந்திருக்கின்ற 

சிட்டின் இல்லம் பாசத் தொட்டிலே 


பசுமை போர்த்தும் மரங்களை வீழ்த்தி 

பகையாய்ப் புகைகின்றதே மனித வுயிர்கள் 

குறைந்த விளைச்சல் மறைக்கும் உணவும் 

நிறைக்கின்றதே வதையைப் பறக்கின்றதே குருவிகள் 


பற்றே  இன்றித் துடிக்கின்ற சிட்டுக்கள் 

படர்கின்ற இந்தத் தனிமைச் சோலையும் 

மாந்தர்க் குறுக்கீட்டால் சிதையுதே வனப்பிழந்து 

மாண்பான இருப்பும் தொலைகின்றதே வெறுமைக்குள் 


கூடு ஒன்றும் காத்திருக்குது அழகாக 

கூடிக் குலவ எதிர்பார்த்தே துடிக்கின்றது 

பற்றி நிற்கும் கம்புத் தூண்கள் 

காற்றின் சுழற்சிக்குள் உடைந்திடாத அணைப்புக்கள் 


ஜன்ஸி கபூர்   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!