About Me

2021/04/21

ஏன் மறந்தாய்

இணைந்தாய் அன்பில்
........இணைத்தாய் கரமதை/ 
இன்னல்கள் அகற்றியே
........இனித்தாய் மனதுள்/

நிழலாய் தொடர்ந்தாய்
.......நினைவுள் முகிழ்த்தாய்/
நிலையற்ற வாழ்விலே
......நிறைந்தாய் உணர்வுக்குள்/

வலிகள் வருகையில்
....வாசலில் உன்னுருவே/
வறுமையை விரட்டவே
.....வழியும் தந்தாயே/

உறவுகள் ஆயிரம்
......உறவாடிடும் பொழுதிலே/
உணர்கின்றேன் உன்னையே
.......உயர்ந்த நட்பாய்/

அழைக்கின்ற பொழுதெல்லாம்
......அணைத்திடுவாய் சிரிப்போடு/
அவலங்கள் சிதைக்கையில்
.......அழித்திடுவாய் அனைத்தையும்/

அறுசுவைத் தித்திப்பின்
.......அடையாளம் நீயன்றோ/
அடைகின்ற பெருமையெலாம்
.......அகமகிழ்ந்தே ரசித்தாயே/

கருத்தினில் நிறைந்தே
.....கனவுக்குள்ளும் உருவானாய்/
கடைசிவரையிலும் தொடர்வாயென்றே
......களித்தேன் எனக்குள்ளே/
கரைந்தாயோ விதியினில்
.......கண்ணீரில் நானடி/
கல்லறைக்குள் உறங்கிடவோ
.......கண்வளர்ந்தாய் மறந்தென்னை

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!