About Me

2021/04/21

வீர மங்கை

அடுக்களை விதியென்று ஆக்கிய மானிடர்/
அதிசயத்து விழிபிதுங்க அரசாளும் பெண்ணிவள்/
காற்றும் அதிர்ந்திடும் காரிகை வீரத்திலே/
தூற்றும் பகைதனை துணிவோடு வேரறுக்க/

பறக்கின்றாள் புரவியினில் பாவையும் முழக்கத்தோடு/
சிறக்கின்றாள் புவியினில் சிரிக்கின்றாள் தாய்மையுடன்/
கையேந்தும் வாளினில் கைதியாவர் பாவிகளே/
கைப்பற்றும் ஆணவத்தில் கரைந்திடுவார் கலக்கத்துடனே/

வலிமையோடு வலியகற்றும் வல்லமைமிகு பெண்ணாய்/
வம்சம் துளிர்த்திட வழிதனைப் படைப்பாளே/

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!