About Me

2021/04/21

தாங்கும் மனைகள்

 
அவலத்தை சூடி அவனியிக்குள் முகவரியான/
அன்பினைத் தேடுகின்ற வயோதிபக் குழந்தைகள்/

உதிரத்தால் செதுக்கி உணர்வுகளால் காப்பிடப்பட்ட/
உறவுகள் உதறியபின் உறைவிடமானதே காப்பிடம்/

சுருங்கிய தேகத்தினுள் சுமையேற்றும் துன்பங்கள்/
சுடாராகி வாழ்ந்தவர்கள் சுகமழிந்த அனாதைகளாய்/

தனிமையைச் சுவாசித்து தனக்குள்ளேயே உருகி/
தளர்ந்த நடைக்குள் தன்னாற்றலை முடக்கி/

தள்ளாடும்  முகங்களைத் தாங்கும் கரங்களாய்/
தரணியில் முகங்காட்டுகின்றன முதியோர் மனைகள்/

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!