About Me

2021/04/21

பொன்னாடு

 


பண்பாட்டின் விழுதுகள் பற்றிடும் நாட்டினில்

எண்ணத்தின்  கலைகளும் இசைந்திடும் வனப்போடு

பண்ணும் பரதமும் அசைத்திடும் மண்ணை

விண்ணும் போற்றிடும் உழவுக்கும் உயிர்கொடுத்தே


ஆய கலைகளும் அரங்கேறிடும் மடிதனில்

தேயாத ஈகையில் விருந்தோம்பலும் உயிர்த்திடுமே

ஓயாத கரகோஷத்தில் சல்லிக்கட்டின் வீரமும்

வாயாரப் புகழுமே பாரம்பரியக் கலைகளும்


ஏட்டறிவின் ஆற்றலும்  வளமாக்குமே வளங்களை 

நட்ட பயிரெல்லாம் சிரித்திடுமே உழவுக்குள் 

வள்ளுவன் குரலாய் ஒலித்திடும் தேனாட்டில்

உள்ளத்தின் உயர்வால் பண்பாடும் வாழ்ந்திடுமே


ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!