About Me

2021/04/21

இன்பத்தமிழ்

மொழிகளின் தாயென 
     மொழிந்தனரே ஆன்றோரும்/
வழியெங்கும் படர்ந்ததே 
     நறுஞ்சுவைக் காப்பியங்கள்/

தொன்மைக்கே மகுடமாம் 
     தமிழினை நானும்/
தொட்டேன் நாவினில் 
     தொப்புள்க்கொடி உறவினாலே/

மென்மையும் வன்மையும் 
      ஒத்திசையும் சந்தங்களாய்/
மெருகேறுகின்றன வார்த்தைகளும் 
     அமிர்தத்தில் நனைந்தபடி/

இலக்கணமும் இலக்கியமும் 
     இதயத்துடிப்பினில் இணைந்தே/
இன்பத்தோடு பரப்புகின்றதே 
     இளைய தலைமுறைகளுக்கே/

நல்லெழுத்துக்களால் நவின்றிடும் 
     எண்ணங்களின் உயிர்ப்பினால்/
நவீனமும் வியக்கின்றதே 
     சொற்சுவையின் தித்திப்பில்/

சங்கத்தால் வளர்ந்தே 
     சரித்திரமாக நீண்டு/
அங்கத்தின் அடையாளமுமாகி 
     அகத்தினை அணைக்கின்றதே/

ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!