About Me

2021/04/22

நாணயம்

நம்பிக்கையை மனதிலேற்றி நம்மை நகர்த்திடும்/
நாணயமே ஆள்கின்றதே மனித வாழ்வினை/

நிலைமாறும் உலகைப் பற்றும் அச்சாணியிது/
நீங்குமே நுகர்வினால் நீடிக்கா  செல்வமாகி/

நுட்பமான சேமிப்பும் காக்குமே எதிர்காலம்/
நூதனசாலைகள் பேணிடுமே பழமைத் தோற்றங்களை/
  
நெஞ்சக் கலக்கம் நீக்கிடும் பொக்கிசமிது/
நேர்மையும் நாணயப் பண்பும் கொண்டோர்/
  
நொந்திடார் அவலங்களால் நிறைந்திடுவார் நிம்மதியினால்/
நோவும் துறந்தே மகிழ்ந்திடுவார் பொழுதெல்லாம்/

ஜன்ஸி கபூர்  
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!