About Me

2021/04/21

கழுகுக் கூட்டம்

 

அண்டத்தையே அடைமானம் வைக்கும் பேராசை/
கொண்டவ னெல்லாம் அடிக்கிறான் கொள்ளை/
திண் பண்டங்களில் பெருங் கலப்படம்/
தண்டனைக்கும் பயமில்லாத் தந்திரக் கூட்டம்/

தொற்றுக் காலமும் பற்றே பணத்தில்/
பெற்ற மகள்மீதும் வன்புணர்வுக் காமம்/
பெண்மையும் முதலீடோ பொல்லா மாந்தருக்கே/
மாண்பற்றவர் மாசேற்றும் கலிகாலம் தானேயிது/ 
 
வேட்டையாடும் ஊழல் நாட்டுக்கே கேடு/
நீட்டிடும் இலஞ்சம் வாட்டுதே வறுமைக்குள்/
கேட்டின் வழியாய் வட்டமிடும் கழுகுக்களைத்/
தட்டிக் கேட்டாலோ வடுக்களே தொடுகின்றது/

வஞ்சக மனதில் வடிந்திடும் கபடம்/
கொஞ்சுதே கண்ணீரை கொடுமைகளும் நீளுதே/
அஞ்சுதே மனிதம் ஆளுதே பணமும்/
பஞ்சாய்ப் பறக்குதே நலங்களும் வாழ்விலே/

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!