About Me

2021/04/21

வேட(ம்)ந் தாங்கல் பறவைகள்



தரைக்குள் பூக்கின்ற முகமூடி மாந்தர்கள்/ 

விரைகின்ற நிமிடங்களுக்குள் கரைக்கின்றனர் வஞ்சங்களை/ 

அஞ்சாரே பாவக் கறைகளைப் பூசிடவே/

கொஞ்சிடுவார் துரோகங்ளும் விழிகளில் புன்னகைக்க/


அழகிய ஆன்மாவுக்குள் நெளிகின்ற புழுக்களால்/

அணைத்திடுவார் பாசத்துடன் காரிய வெற்றிக்கே/

தழுவிடும் மனங்களில்  தந்திரமாக வீழ்ந்தே/

பாழும் கிணற்றில் பக்குவமாக வீழ்ததிடுவார்/


மெய்க்குள் பொய்களை நிரப்பி வாழ்ந்தே/

பைக்குள் பணத்தினை நிரப்பிடுவார் வேடமிட்டே/

பல முகத்தோடு  பறந்திடும் பறவைகளாகி/

கலந்திடுவார் ஏமாற்றங்களை ஏற்ற தருணத்திலே/


மதியால்  விதியை அழகூட்டி களிப்புறுவார்/

சதியையும் தீட்டுவார் சந்தோசம் காட்டியே/ 

உறவாகி விரிக்கும் சிறகுக்குள் அக்கினியை/

உரசிடுவார் வேட(ம்)ந் தாங்கல் பறவைகளாகி/


ஜன்ஸி கபூர் 

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!