About Me

2021/04/14

தூங்காதே தம்பி தூங்காதே

 

தூங்காதே தம்பி தூங்காதே நீயும்/
சோர்வினில் துன்பம் வாங்காதே வீணாய்/
சரித்திரத்தில் பதிவாகும் உன் பெயரெல்லாம்/
தரித்திரமாக மாறிப் போகுமடா தம்பி/

உன் குறட்டையால் அருகிருப்போர் உறக்கமிழப்பார்/
உறங்காத விழிகளின் சாபத்திலே நீயும்/
சுகமிழப்பாய் வீழ்த்திடுவாரே உன்னையும் கேலிக்குள்ளே/ 
சும்மா நீயும் தூங்காதே தம்பி/

வேலைத் தளத்திலே நீயும் உறங்கும்போது/
தொழிலை இழப்பாய் வறுமையும் தழுவும்/
போரினில் தூங்கினாலோ தேசம் பறிபோகும்/
பள்ளியிலே தூங்கினாலோ புள்ளிகள் இழப்பாய்/
 
விற்பனையில் தூங்கியவன் சொத்து இழந்தான்/
மேடையினில் உறங்கியவன் பேச்சும் இழந்தான்/
கடமையில் தூங்கியவன் தொழிலும் துறந்தான்/
தூக்கத்தை நேசிப்பவன் துக்கத்தில் விழுந்தான்/

உன்தன் தூக்கத்தால் பலமிழப்பாய் தினமும்/
நீண்ட உறக்கத்தில் கண்டிடுவாய் நோய்தனை/
கண்ட கண்ட நேரத் தூக்கத்தினாலே/
உன்றன் புகழும் பறிபோகுமே கண்முன்னாலே/

நீ விரும்பும் இந்தத் தூக்கத்தினால்/
உனைச் சாரந்தோரெல்லாம் பாவம் அப்பா/
தூங்காதே தம்பி இனித் தூங்காதே/
தூங்கிய பின்னர் தேம்பி அழாதே/

ஜன்ஸி கபூர்  - 11.10.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!