About Me

2021/04/14

ஆண்-பெண்கள்

 

 
ஓர் குடும்பத்தின் கட்டமைப்பை நிர்வகிக்கும் பாரிய பொறுப்பை பெண்கள் சுமக்கின்றார்கள்.அவளுக்குக் கிடைக்கின்ற ஓய்வும் மிகக் குறைவே. அக்குறைந்த  ஓய்வுக்குள்ளும் நேரத்தைத் திட்டமிட்டு தம் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இலக்கிய கலையுலகில் தடத்தினைப் பதித்து முகநூல்க் குழுமங்களில் முன்னணி வகிக்கின்றார்கள் பெண்கள். ஆனாலும் இந்நிலையை எய்த அவர்கள் பல சவால்களை ஏற்க வேண்டியுள்ளது. ஆணாதிக்கச் சிந்தனையுடைய சிலர் விமர்சனம் எனும் பெயரில் அவளது ஆற்றலை ஆசைகளைக் கிள்ளியெறியத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  முகநூல் என்பது சர்வதேசத்தை தனது கரங்களுக்குள் அடங்கியிருக்கின்ற குழுமம் என்பதால் அவளின் கருத்துக்களை வெவ்வேறு திசைகளில் பரப்பிவிட சில குடும்ப உறவுகளும் தடையாக இருக்கின்றன. இருந்தும் இத்தடைகளையும் கடந்தே பெண்களின் கலைப் பயணம் முன்னணியில் திகழ்கின்றது என்பதே உண்மையாகும்.

இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். பெண்கள் ஆண்களின் தடைகளைத் தாண்டியே தமது ஆற்றலை வெளிப்படுத்துகின்றார். பெண்ணின் கலை வளர்ச்சி உச்சம் அடைகின்ற பட்சத்தில் ஆண்கள் மௌனம் சாதிக்கின்றார்கள். இத்தகைய ஆண்கள் இல்லாதபட்சத்திலும் பெண்களின் தன்னம்பிக்கை அவளைத் தனித்து இயங்கச் செய்யும். ஆண்களின்றி அவர்களால் சுயமாகப் பயணிக்க முடியும்.

 ஆண்களின் அனுமதியைப் பெற்றுத்தான் பெண்கள் இயங்க வேண்டுமென்றால் பெண்களை முகநூலில் காணவே முடியாது. ஆண்களின் தடைகளையும் இலகுவாகக் கடக்கின்ற சாமர்த்தியம் பெண்களுக்கு உண்டு.

 நிறைய பெண்கள் எழுதுகின்றார்கள். போட்டி நடத்துனர்களுக்கு இது தெரியும். ஆனால் வெற்றி வாய்ப்புக்கள் அனுபவமுள்ள ஆண்களுக்குப் போய் விடுகின்றன போலும். இதுதான் உங்கள் கருத்துக் கணிப்பிற்கான விளக்கம்

ஜன்ஸி கபூர் - 7.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!