நுதலும் இதழும் அழகாகப் பிணைந்தே
நுகர்கின்றதே விழிகளும் காதலைச் சுகமாக
இதய மகிழ்வில் இசையும் அன்பும்
இறக்கை விரிக்கும் உயிரினை வருடி
அணைப்பில் தழுவும்ஆனந்தச் சிலிர்ப்பு
அடங்குமோ காற்றும் விலக்கா நெருக்கமிது
உயிரின் ஒலியினில் உணர்வின் துடிப்புக்கள்
உவகை மனங்களின் உல்லாசத் தூறல்கள்
சங்கமிக்கும் ஆசைகள்வரைந்திடும் கோலங்கள்
சந்திக்கத் துடிக்கின்றனவோ மங்கல மேடைதனில்
ஜன்ஸி கபூர் - 01.11.2020

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!