About Me

2021/04/14

கூடலிற் தோன்றிய உப்பு

விழியின் மொழியோ விளைந்திடும் காதல்/
வீழ்த்திடும் அன்பும் மொழிந்திடும் காமம்/ 
விடிந்திடா இரவுகள் நீள்கின்றதே இன்பத்தில்/
விளைகின்ற வியர்வையும் பிணைகின்றதே நுதலில்/

அணைக்கும் கரங்கள் மீட்டுகின்ற தேகங்கள்/
அடங்கிடுமோ காதலும் மொழிகின்ற சுகத்தில்/
புலவியின் பயனாய் பொங்கும் கலவி/
புளாங்கிதமே மேனிக்கு புத்துணர்ச்சியும் உணர்வுகளுக்கே/

செய்யாத தவற்றின் தவிப்பும் படரும்/
செல்ல ஊடலோ கூடலின் வழியோ/
பிரியத் தலைவனும் மொழிகின்றான் பிரிவிற்கே/
பிரிந்திடாக் காதலில் இணங்கி வாழ்வதற்கே/ 

உப்பும் விளைந்திட பூக்கட்டும் வியர்வை/
உச்ச இன்பமும் சுவைத்திடலாம் ஊடலில்/
உன் னுறவுக்குள் ஊறலைத் தூவடி அன்பே/
ஊட்டம் பெறுவோம் அன்புநிலையும் உயிர்த்திட/

ஜன்ஸி கபூர் - 29.10.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!