About Me

2021/04/14

சுயமியால் சுயமிழப்பவர்கள்

 


நயமெனக் கருதி
நஞ்சினைத் தீண்டும்/
நாகரிக மாந்தரின்
நவீன மொழியோயிது/

நிதமும் தன்னை
ரசித்திடும் துடிப்பினுள்/
நீள்கின்றனர் பாதகத்துள்
காண்கின்றனர் புதுவுலகை/

அறிவியல் தேடலின்
அழகில்லாப் பண்பாடு/
அடுத்தவர் கவனமீர்த்தே
அலைகின்றதே நாகரிகமாக/

அனலுக்குள் தடமாகும்
ஆபத்தின் ரசிப்புக்களை/
அணைக்கின்றனர் அலைபேசிக்குள்
ஆசைகளை அரங்கேற்ற/

தடையில்லாச் சுதந்திரம்
தருகின்ற தைரியம்/
தரணிக்குள் பதிவேற்றும்
ஆனந்தச் சிலிர்ப்புக்கள்/

நிறைந்திடும் வாலிபம்
நீள்கின்றதே பாதகத்துள்/
நிழற்பட மாயைக்குள்
வீழ்கின்றனர் விட்டில்களாகி/

சுயமதைத் தொலைத்தே
சுற்றுமிந்த சுயமிகள்/
சுற்றிடும் பூமிக்குள்
சுற்றங்கள் மறந்தே/

பற்றுகின்றனர் ஆவலினால்
பொருந்தாக் காட்சிகளை/
தோற்றே போகின்றனர்
சூழ்ச்சியின் வேட்டைக்குள்/

ஜன்ஸி கபூர் - 02.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!